Published : 01 Sep 2014 10:48 AM
Last Updated : 01 Sep 2014 10:48 AM
புதிய அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் தொடர்வதால், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்.ஐ.ஐ.) இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014ம் ஆண்டில் மட்டும் 3,000 கோடி டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
இதில் 1,700 கோடி டாலர் (ரூ.1.2 லட்சம் கோடி) இந்திய கடன் சந்தையிலும், 1,300 கோடி டாலர் (ரூ.78,000 கோடி) இந்திய பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில் மொத்த முதலீடு 365 கோடி டாலர்(ரூ.22,082 கோடி). இந்திய பங்குச்சந்தையில் 1992ம் ஆண்டு முதல் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இதுவரையில் மொத்த முதலீடு 20,001 கோடி டாலர் (ரூ. 9.7 லட்சம் கோடி) ஆகும்.
இந்தியாவுக்கு வந்திருக்கும் மொத்த அந்நிய முதலீட்டில் 15,900 கோடி டாலர் முதலீடு இந்திய பங்குச்சந்தையிலும், 4,200 கோடி டாலர் இந்திய கடன் சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சென்செக்ஸ் 2014ம் வருடத்தில் இதுவரை 26 சதவீதம் உயர்ந்தது. இப்போது 26500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிறது. இந்த ஏற்றத்துக்கு அந்நிய முதலீட்டாளர்களும் ஒரு காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT