Published : 25 Feb 2017 10:41 AM
Last Updated : 25 Feb 2017 10:41 AM
அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) கடந்த ஆண்டில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 4,600 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொழில் கொள்கை மேம்பாட்டுத்துறை (டிஐபிபி) தெரிவித்துள்ளது.
2015-ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 3,992 கோடி டாலராகும். சேவைத் துறை, தொலைத் தொடர்பு, வர்த்தகம், கம்ப்யூட்டர் ஹார்டு வேர், சாப்ட்வேர் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் அதிக முதலீடுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருமளவிலான அந்நிய நேரடி முதலீடு சிங்கப்பூர், மொரீஷியஸ், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிப்பால் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ஸ்திரமாக நிலைத்திருக்க வழியேற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT