Last Updated : 01 Feb, 2016 11:04 AM

 

Published : 01 Feb 2016 11:04 AM
Last Updated : 01 Feb 2016 11:04 AM

ஹெச்எம்டிக்கு நேரம் சரியில்லை!

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப புரட்சியின் விளைவில் உருவான உபகரணங்கள் இல்லாத காலத்தில் நாட்டுக்கே நேரத்தை கணித்த கடிகார உற்பத்தி நிறுவனத்துக்கு இன்று நேரம் சரியில்லை. ஆம் 1960 களில் தொடங்கப் பட்ட ஹெச்எம்டி நிறுவனம் மூடப்பட்டு விட்டது. இந்த நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டத்தை வழங்கவுள்ளது.

ஹிந்துஸ்தான் மெசின்ஸ் டூல்ஸ் (ஹெச்எம்டி) என்ற உற்பத்தி நிறு வனம் 1953-ம் ஆண்டு இந்திய அரசாங் கத்துடன் இணைக்கப்பட்டது. கடிகாரம், டிராக்டர்ஸ், அச்சு இயந்திரங்களை தயா ரித்து வந்தது. 1961ம் ஆண்டு ஹெச்எம்டி நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த சிட்டிசன் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பெங்களூருவில் உள்ள ஆலை யில் முதலாவது கைக் கடிகாரத்தை தயாரித்தது. அதை சந்தையிட்ட பெருமை நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சாரும்.

ஹெச்எம்டி பைலட், ஹெச்எம்டி ஜாலக், பார்வையற்றவர்களுக்காக ஹெச்எம்டி பிரையிலி என விதவித மான மாடல்களில் வாட்ச் தயாரிக்கப் பட்டன. 1976-ம் ஆண்டில் 10 லட்சம் கடிகாரங்களை இந்நிறுவனத்தின் மூன்று ஆலைகளும் உற்பத்தி செய்து சாதனை புரிந்தன.

இப்படி அதிகமான விற்பனை கண்டு வந்த ஹெச்எம்டி தற்போது மூடப்படுவதற்கு மூன்று காரணங்களை சொல்லுகிறார்கள். ஒன்று தொழில் நுட்பத்தை மேம்படுத்தி கொள்ளாதது, இரண்டு டைட்டன் நிறுவனத்தின் வருகை, மூன்று உறுதியான முடிவு களை எடுக்காமல் இருந்தது.

1970க்கு பிறகு டிஜிட்டல் குவார்ட்ஸ் வாட்சுகள் உலக சந்தைக்கு வரத் தொடங்கின. 2 டாலர் மதிப்புள்ள கடி காரம் 1,000 டாலர் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சுகளை விடத் துல்லியமாக நேரம் காட்டியது. ஹெச்எம்டி நிறுவன மும் குவார்ட்ஸ் வாட்சுகளை அறிமுகப் படுத்தின. ஆனால் ஹெச்எம்டி நிறுவனம் மிகக் குறைந்த மாடல் களையே தயாரித்தன.

டைட்டன் நிறுவனத்தின் வருகை

டாடா நிறுவனம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தோடு இணைந்து 1984-ம் ஆண்டு முதல் கைக்கடிகார தயாரிப் பில் ஈடுபட்டது. உலகத்தரம் வாய்ந்த இன்ஜினீயர்களை இந்த நிறுவனம் பணியில் அமர்த்தியது. அதுமட்டு மல்லாமல் அனலாக் மற்றும் டிஜிட்டல் குவார்ட்ஸ் வாட்சுகள் என இரண் டுக்குமே முன்னுரிமை கொடுத்து புதுப் புது மாடல்களில் வாட்சுகளைத் தயாரித்து ஹெச்எம்டிக்கு கடும் போட்டி யாக இருந்து வந்தது.

ஹெச்எம்டி நஷ்டத்தில் இயங்கி வந்ததற்கு டைட்டன் வருகை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. உறுதியான முடிவுகளை எடுக்க தவறியதும் ஒரு காரணம். வாட்ச் தயாரிப்புகளில் மக்களின் ரசனைக்கு ஏற்ப புதுப்புது தொழில்நுட்பத்தில் வாட்சுகளைத் தயாரிக்க வேண்டும். அதற்கு உறுதியான தலைமை தேவை. முடிவுகளும் வேகமாக எடுக்க வேண் டும். அவ்வாறு செய்யாததும் ஹெச்எம்டி நிறுவனத்தின் நஷ்டத்திற்கு காரணம் என்கிறார்கள். மேலும் உற்பத்தி ஆலை களிலும் தொழில்நுட்ப ரீதியாக முன் னேற்றம் செய்யவில்லை.

மேலும் அதிகமான ஊழியர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன் படுத்துவதில்லை. நிறைய ஊழியர் களுக்கு முறையான பயிற்சி வழங் காததும் நஷ்டத்திற்கு காரணம்.

ஹெச்எம்டியை மூட வேண்டாம் என்றும் போர்க்கொடிகள் உயர்ந்துள் ளன. அங்கு பணியில் இருக்கும் ஊழி யர்கள், எங்களுக்கு இன்னும் சர்வீஸ் இருக்கிறது ஏன் நாங்கள் விருப்ப ஓய்வு கொடுக்கவேண்டும் என்று கேட்கிறார்கள். பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விட ஹெச்எம்டி குறைவான நஷ்டத்தில் (வருடத்திறகு 233 கோடி நஷ்டம்) தான் இயங்கி வருகிறது. அதனால் இதை மூடக்கூடாது என்று கூறுகின்றனர்.

மிகப் பெரிய வளர்ச்சியை கண்டி ருக்கும் சிங்கப்பூரிலும் பொதுத்துறை நிறுவனங்கள் அதிகம் உள்ளன. ஆனால் அவை யாவும் நஷ்டத்தில் இயங்கு வதில்லை மாறாக அதிக லாபத்தை ஈட்டுகின்றன. இதற்கு காரணம் அரசின் நடவடிக்கைகள் தான். பொதுத்துறை நிறுவனங்களுக்கு என்று பிரத்யேகமாக நிதியை ஒதுக்குவது அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தினந் தோறும் அந்நிறுவனங்களை கண் காணிப்பது, முக்கிய முடிவுகளை உடனடியாக எடுப்பது போன்றவற்றால் அவர்கள் உற்பத்தி திறனை மேம் படுத்துகிறார்கள்.

இந்தியா போன்ற நாடுகள் ஆரம்பத்திலேயே இது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றியிருக்க வேண்டும். அமைச்சர்களும் அரசு அதி காரிகளும் விழிப்புணர்வோடு இருந்தி ருந்தால் இவ்வளவு நஷ்டம் ஏற்பட்டி ருக்காது. இவ்வளவு ஊழியர்களும் கட்டாய விருப்ப ஓய்வுக்கு தள்ளப் பட்டிருக்கிற நிலைமை ஏற்பட்டிருக்காது. அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மீது வெகு சீக்கிரமான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய தருணமிது.

devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x