Published : 11 Sep 2017 11:08 AM
Last Updated : 11 Sep 2017 11:08 AM

பழைய வாகனங்களை தடை செய்க...

சு

ற்றுச் சூழல் பாதுகாப்புக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழலில் பாரத் 6 சூழல் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப வாகனங்களைத் தயாரிக்கும் முனைப்பில் ஆட்டோமொபைல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் புதிய நடவடிக்கைகள் மட்டுமே சூழலை பாதுகாக்க உதவாது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்குத் தடை விதிப்பதன் மூலமும் சூழலை பாதுகாக்க முடியும் என்று ஆட்டோமொபைல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் இது தொடர்பாக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தற்போது பிஎஸ் 6 புகை வெளியிடும் தர அளவுக்கேற்ப வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் மாசுபடும் அளவு குறையும். ஆனால் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் சாலைகளில் புழங்குவதால் வெளியாகும் மாசு, அரசின் சூழல் பாதுகாப்பு இலக்கை நிறைவேற்ற உறுதுணையாக இல்லை என்று சியாம் தலைவர் வினோத் கே தாசரி குறிப்பிட்டுள்ளார்.

அரசின் `மேக் இன் இந்தியா’ திட்டத்தை மேலும் வெற்றிகரமாக செயல்படுத்த தேசிய ஆட்டோமோடிவ் குழுவை உருவாக்கலாம் என்றும் இதன் மூலம் வாகன வடிவமைப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்தி அதன் மூலம் `மேக் இன் இந்தியா’ திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

கொள்கை முடிவுகளை அரசு அடிக்கடி மாற்றம் செய்வது இத்துறையை வெகுவாக பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சூழல் பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்கும் அதே நேரம் சூழலைக் கெடுக்கும் பழைய வாகனங்களைத் தடை செய்ய விடுக்கும் கோரிக்கையும் நியாயமானதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x