Published : 03 Apr 2017 10:25 AM
Last Updated : 03 Apr 2017 10:25 AM

உன்னால் முடியும்: பசுமைப் பணியில் புதிய யோசனைகள்...

இயற்கை வழி விவசாயத்துக்கான விழிப்புணர்வு அதிகரித்துவரும் அதேவேளையில் தங்களுக்கு தேவையான காய்களை வீட்டிலேயே விளைவித்துக் கொள்வதற்கான முயற்சி களையும் மக்கள் மேற்கொண்டு வருகின் றனர். அந்த வகையில் சமீப காலத்தில் மாடித்தோட்ட முறை பிரபலமாகிவரு கிறது. இதைத் தொழில் முறையில் அமைத்துத் தருவதுடன், கார்ப்பரேட் நிறுவனங்களில் விவசாயம் என்கிற புதிய ஐடியாவிலும் இயங்கி வருகிறார் மாதவன். அவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிகவீதி’யில் இடம் பெறுகிறது.

``சொந்த ஊர் திண்டிவனம் பக்கத்தில் உள்ள மயிலம் கிராமம். விவசாயத் துறை யில் பட்டப் படிப்பு முடித்து ஒரு விதை நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண் டிருந்தேன். அந்த நிறுவனத்துக்காக தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா என தென்னிந்திய மாநிலம் முழுவதும் அலைந்து விவசாயிகளை சந்தித்ததில், அவர்களது தேவைகள், மண்வளம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இதன் மூலம் எனது விவசாய அறிவை வளர்த்துக் கொண்டதுடன், அவர்களுக்கு இயற்கை வழி விவசாயத்தில்தான் லாபம் கிடைக்கும் என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டேன். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி, நண்பர்களுடன் சேர்ந்து இயற்கை விவசாய உற்பத்தி ஆராய்ச்சிகளில் இறங்கினேன்.’’

``கர்நாடகாவின் கூர்க், கேரளாவின் இடுக்கி பகுதி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப் பவர்கள். அங்கு சில ஆண்டுகள் இந்த வேலைகளை செய்ததுடன், உற்பத்தி செய்து சென்னைக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தோம். பின்பு அங்கிருந்து சென்னை வந்ததுடன், சொந்த ஊரில் நண்பர்களுடன் சேர்ந்து தர்பூசணி விவ சாயம் செய்து ஏற்றுமதி செய்யத் தொடங் கினேன். ஆனால் எனது விவசாய அறிவை நான் மட்டுமே பயன்படுத்துவதைவிட பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக இதை முறைப்படுத்த யோசித்தேன். அந்த வகையில்தான் நிறுவனத்தை தொடங்கினேன்.’’

``மாடித்தோட்டம் குறித்து மக்களின் கவனம் அதிகரிக்கத் தொடங்கியதும் அதை அமைத்துக் கொடுக்கும் வாய்ப்புகள் வந்தன. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அமைத்து கொடுத்ததுடன், அதற்கான ஆலோசனை, பராமரிப்பு உள்ளிட்டவற்றையும் தொழில் முறையாக மாற்றினோம்.

மாடித்தோட்டம் அமைக்க பலரும் ஆர்வமாகவே இருந்தாலும், ஈடுபடு பவர்களில் பத்து நபர்களில் ஆறு பேர் மட்டுமே முறையாக செயல்படுகின்றனர். ஆரம்பத்தில் ஆர்வமாகவும், பின்பு அவர்களின் ஆர்வம் குறைந்து விடுகிறது. ஆனால் மாடித்தோட்டம் அமைத்தால் நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு தொடர்ச்சியாக ஆண்டு முழுவதும் காய்கள் கிடைக்கும் வகையில் திட்டமிட முடியும். ஒரு செடி காய்த்து முடிந்ததும் அடுத்த செடியிலிருந்து காய் தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள். இதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தினோம். இந்த பணிகளையே இப்போது பேக்கேஜாக செய்து கொடுக்கிறோம்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை எங்களது ஊழியர் வாடிக்கையாளர்களின் மாடித் தோட்டங்களுக்கு சென்று அங்கு செடிகள் எப்படி உள்ளன. அடுத்து என்ன செய்ய வேண்டும் என அறிக்கை கொடுப்பார். அதுபோல 150 நாட்களில் ஒரு செடி காய்ப்பு முடியும் என்றால் 120 வது நாளில் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டல் மெசெஜ் அனுப்புகிறோம்.

தற்போது இதன் அடுத்த கட்டமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விவ சாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன். டிசிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் பூங்காவை பாரமரிப்பதற்கு பதில், அந்த இடங்களில் விவசாய பணிகளில் ஆர்வமுள்ள பணியாளர்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்த முறையால் ஊழியர்கள் உற்சாக மடைவதுடன், அவர்களுக்கு பணியிடத் தில் திருப்தியும் கிடைக்கிறது என்பதால் நிறுவனங்களும் இதை ஊக்குவிக் கின்றன. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் நடமாடும் ஆர்க்கானிக் மையம் என வாகனங்களில் மாடித்தோட்ட பொருட்களை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம். இப்போது இந்த வேலைகளில் சுமார் 15 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளேன்.

எல்லோருக்கும் தெரிந்த வழக்கமான ஒன்றுதானே என யோசித்தால் இதிலிருந்து எனக்கு எந்த வருமானமும் கிடைத்திருக்காது. இதில் புதிதாக என்ன செய்யலாம் என யோசிப்பதால்தான் முடிவதால்தான் தொழிலாக செய்ய முடிகிறது என்றார். பசுமைப் பணியில் புதிய யோசனைகளோடு இறங்கினால் வருமானம் நிச்சயம் என்று சொல்லாமல் சொல்கிறார் மாதவன்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x