Published : 13 Jul 2018 08:05 AM
Last Updated : 13 Jul 2018 08:05 AM
இந்தியாவில் ஆதார் திட்டத்தை செயல்படுத்தியதால் ரூ.90,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்று ஆதார் ஆணையத்தின் தலைவர் ஜே.சத்யநாராயணன் தெரிவித்தார்.
இந்தியாவில் தினசரி பயன்பாட்டில் ஆதார் உள்ளது. பொது விநியோகத் திட்டம், ஓய்வூதியம், ஊரக வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சராசரியாக தினசரி 3 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். சர்வதேச அளவில் மின்னணு அடையாளமாகவும் ஆதார் பயன்படுகிறது.
ஆதார் அடையாளம் நடைமுறை ப்படுத்தியதால் பெட்ரோலியத் துறை, இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பொது விநியோகத் திட்டங்களில் ரூ.90,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. பயோமெட்ரிக் அடையாள முறையை மேலும் சிறப்பாக பயன்படுத்தும் முயற்சிகளில் உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT