Published : 11 Jul 2018 08:37 AM
Last Updated : 11 Jul 2018 08:37 AM

சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயர்வு

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து வருகின்றன. ஜூன் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு, ஸ்திரமான சர்வதேச சூழல் மற்றும் பெரிய நிறுவனங்களில் வாங்கும் போக்கு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. சர்வதேச அளவில் முக்கியமான சந்தைகளில் ஏற்றம் இருந்தது. ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி ஆகிய பங்குகளில் வாங்கும் போக்கு அதிகமாக இருந்தது.

சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயர்ந்து 36240 புள்ளியிலும், நிப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 10,947 புள்ளியிலும் முடிவடைந்தன. கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் உயர்ந்திருக்கின்றன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பங்குகளில் 21 பங்குகள் உயர்ந்தும், நிப்டி பட்டியலில் உள்ள பங்குகளில் 33 பங்குகள் உயர்ந்தும் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. துறைவாரியாக பார்க்கும் போது ஹெல்த்கேர் குறியீட்டினை தவிர மற்ற பங்குகள் கடுமையாக சரிந்தன.

திங்கள் கிழமை வர்த்தகத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.740 கோடி அளவுக்கு இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன. மாறாக 569 கோடி அளவுக்கு வெளிநாடு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றிருக்கிறார்கள்.

சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, யெஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ மற்றும் கோல் இந்தியா ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்தன. மாறாக கோடக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, ஹீரோமோட்டோ கார்ப் மற்றும் டிசிஎஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x