Published : 12 May 2018 08:24 AM
Last Updated : 12 May 2018 08:24 AM
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் காலம் 10 ஆண்டுகளாகும்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. கார்களை 20 நாள்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி சென்னை துறைமுகத்தில் வைத்து பாதுகாத்தல், முன்னுரிமை அடிப்படையில் கார்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்தும்போது இரட்டைக் கட்டணம் வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்டவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய்.கே. கூ மற்றும் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் பி. ரவீந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT