Published : 10 May 2018 08:41 AM
Last Updated : 10 May 2018 08:41 AM

சுந்தரம் பாஸனர்ஸ் நிகர லாபம் 8.62% உயர்வு

சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 8.62 சதவீதம் உயர்ந்து ரூ.95.22 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.87.66 கோடியாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 16.47 சதவீதம் உயர்ந்து ரூ.367 கோடியாக இருக்கிறது. கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.315 கோடியாக இருந்தது.

மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.848 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.962 கோடியாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.3,478 கோடியாக இருக்கிறது. கடந்த 2016-17-ம் நிதி ஆண்டு மொத்த வருமானம் ரூ.3,184 கோடியாக இருந்தது.

ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் ரூ.1,144 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் ஏற்றுமதியின் பங்கு 30 சதவீதமாக இருக்கிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் ஐந்தாண்டுகளில் மொத்த விற்பனையில் 50 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி உயரும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி கிருஷ்ணா தெரிவித்தார்.

இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது, ஆட்டோமொபைல் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் வருவதற்கான சாத்தியங்கள் இருந்தாலும் எந்த அளவுக்கு என்பதில் பல கணிப்புகள் இருக்கிறது.

2030-ம் ஆண்டில் கூட அதிகபட்சம் 30 சதவீதம் வாகனங்கள் மட்டுமே (அமெரிக்காவில்) எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஐசி இன்ஜின் களுக்கான தேவை குறையாது. தவிர எலெட்க்ரிக் வாகனங்களின் விலை மட்டும் அதிகமாக இல்லை. அதனை பராமரிப்பது, மறுவிற்பனை உள்ளிட்ட பல விஷயங்களில் தீர்வு காணப்பட வேண்டி இருக்கிறது என சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x