Published : 09 May 2018 08:31 AM
Last Updated : 09 May 2018 08:31 AM

ஜிபிசிஎல் நிகர லாபம் 59% உயர்வு

கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 59 சதவீதம் உயர்ந்து ரூ.617 கோடி யாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.387 கோடியாக இருந்தது.

இந்த காலாண்டில் விற்பனை சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.2,480 கோடியாக இருந்த விற்பனை ரூ.2,494 கோடியாக இந்த காலாண்டில் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதால் விற்பனையை கடந்த ஆண்டு மார்ச் காலாண்டுடன் ஒப்பிட முடியாது என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 24.9 சதவீதம் உயர்ந்து ரூ.1,634 கோடியாக இருக்கிறது.

கடந்த ஆண்டில் ரூ.1,307 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த நிதி ஆண்டில் விற்பனை ரூ.9,936 கோடியாக இருக்கிறது. கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.9,608 கோடி யாக விற்பனை இருந்தது.

நடப்பு நிதியாண்டில் பல புதிய அறிமுகங்கள் இருக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் நிஷாபா கோத்ரெஜ் தெரிவித்தார். நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.84 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x