Published : 08 May 2018 03:41 PM
Last Updated : 08 May 2018 03:41 PM

‘பிரேக் பிரச்சினை எதிரொலி’ - 52,000 கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி

மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மற்றும் பெலினோ கார்களில் பிரேக் பிரச்சினை இருப்பதாக எழுந்த புகாரயடுத்து 52,686 கார்களை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி ஆண்டுக்கு பல லட்சம் கார்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவன தயாரிப்புகளில், அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் ஸ்விப்ட் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. இதுபோலவே பொலினோவும் கார் பிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 2017ம ஆண்டு டிசம்பர் முதல் 2018ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி வரை மாருதி நிறுவனம் தயாரித்த ஸ்விப்ட் மற்றும் பொலினோ கார்களில் பிரேக் பிரச்சினை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த கார்களை திரும்பப் பெற்று அவற்றை சரி செய்து கொடுப்பதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘மொத்தம் 52,686 மாருதி ஸ்விப்ட் மற்றும் பொலினோ கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். கார்களில் தயாரிப்பு பிரச்சினை இருந்தால், வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வந்தால் அதனை சரி செய்து கொடுக்கும் சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப இந்த கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்.

வரும் 14-ம் தேதி முதல் அந்த கார்களில் இருக்கும் பிரேக் பிரச்சினையை சரி செய்யப்படும். கார் உரிமையாளர்கள் மாருதி நிறுவனத்தில் காரை கொண்டு வந்து இலவசமாக இந்த சலுகையை பெறலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றப்படும் உதிரி பாகங்கள் மற்றும் சேவைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது’’

இவ்வாறு மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x