Published : 21 Mar 2018 08:49 AM
Last Updated : 21 Mar 2018 08:49 AM
இந்தியாவிலிருந்து அதிக அளவு பாசுமதி அரிசியை ஈரான் இறக்குமதி செய்வதால் இந்திய ஏற்றுமதி நடப்பாண்டில் 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நடப்பாண்டில் பாசுமதி ஏற்றுமதி வருமானம் ரூ. 26 ஆயிரம் கோடியைத் தொடும் எனத் தெரிகிறது. 2019-ல் இது ரூ. 28 ஆயிரம் கோடியாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் 22 சதவீத அளவுக்கு ஏற்றுமதி உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் ரூ. 53,985 கோடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் இது ரூ. 64,594 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பாசுமதி ரக அரிசியை மிக அதிக அளவில் சவூதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. இந்திய ஏற்றுமதியில் 40 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை வளைகுடா நாடுகளுக்குச் செல்கிறது. இதில் ஈரான் 28 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்கிறது.
தடை நீக்கம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய பாசுமதி அரிசிக்கு ஈரான் சிறிதுகாலம் தடை விதித்தது. அந்தத் தடை கடந்த ஜனவரியில் விலக்கிக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT