Published : 24 Feb 2018 07:50 AM
Last Updated : 24 Feb 2018 07:50 AM

பெரிய கடன்களை கண்காணிக்க அமைச்சகம் உத்தரவு

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் ஏற்படுத்திய அதிர்வலைகளைத் தொடர்ந்து பெரிய கடன்களைக் கண்காணிப்பதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர் பாக வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

ஒரு கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம், செலவு செய்த பணத்துக்கு சமமாக இருக்கிறதா என்பது குறித்து கணக்கு சரிபார்ப்பில் பரிசோதிக்கப்படும் எனத் தெரிகிறது. இது தவிர ரூ.250 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்களின் கணக்கைக் கண்காணிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ரோட்டோமேக் விவகாரங்களில் பாதிக்கப்பட்ட ஏழு பொதுத்துறை வங்கிகள் சிறப்பு அதிகாரி அல்லது குழு ஒன்றை உருவாக்க இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. பிஎன்பி மோசடி வெளிவந்த பிறகு நிதி அமைச்சகம் எடுக்கும் முதல் நடவடிக்கையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x