Published : 22 Feb 2018 08:38 AM
Last Updated : 22 Feb 2018 08:38 AM

வீட்டிலேயே ஐசியூ சிகிச்சை: பிலிப்ஸ் அறிமுகம்

தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவர்களின் ஒப்புதலோடு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் ஐசியூ அட் ஹோம் திட்டத்தை சென்னையில் பிலிப்ஸ் ஹெல்த்கேர் அட் ஹோம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின் பிலிப்ஸ் ஹெல்த்கேர் அட் ஹோம் பிரிவின் வணிகப் பிரிவுத் தலைவர் ரிச்சா சிங் கூறியதாவது:

மூச்சுத்திணறலுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் சேவையை அளித்துவரும் பிலிப்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தீவிர மற்றும் நாள்பட்ட நோய்களுக்கும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வகையில் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. அனுபவமிக்க மருத்துவர்கள்,செலிலியர்கள், அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் மருத்துவமனையில் வழங்குவது போன்ற சிகிச்சையை வீட்டிலேயே வழங்க முடியும். இந்த சேவையை டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் சில மாதங்களாக வழங்கி வருகிறோம். மருத்துவமனையில் நீண்ட காலம் தங்குவதால் ஏற்படும் செலவுகளை விட இந்த முறையில் செலவு குறைவாக இருக்கும் என்று ரிச்சா சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x