Published : 20 Feb 2018 08:55 AM
Last Updated : 20 Feb 2018 08:55 AM
ஹைப்பர்லூப் அதிவேகப் போக்குவரத்துக்கான ஒப்பந்தத்தை விர்ஜின் குழுமத்துடன் மஹாராஷ்டிர அரசு செய்துள்ளது. இதன் மூலம் மும்பை மற்றும் புணேவுக்கான பயண தூரம் மூன்று மணி நேரத்திலிருந்து 25 நிமிடமாகக் குறையும்.
இந்த ஹைப்பர்லூப் வழித்தடம் மத்தியப் புணேவை, மெகாபொலிஸ் மற்றும் நவி மும்பை விமான நிலையத்துடன் இணைக்கும். நவி மும்பை விமான நிலையத்துக்கான அடிக்கல்லை கடந்த ஞாயிறன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. மஹாராஷ்டிர முதலீட்டாளர் மாநாட்டின் முதல்நாளில் இது குறித்து கருத்து தெரிவித்த விர்ஜின் குழுமத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் இயங்கக்கூடிய மாதிரி வழித்தடத்தோடு துவங்கவுள்ள இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த அதிவேக அமைப்பு, போக்குவரத்துத் துறையை மாற்றியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்த பிரான்சன் இதன் சமூகப் பொருளாதாரப் பயன் மதிப்பு ரூ. 3,54,750 கோடி எனவும் இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். இந்த திட்டத்துக்கான செலவு மற்றும் செயல்பாட்டுக்கு வரும் நாள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்துக்கான பணிகள் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைப்பர் லூப் போக்குவரத்து சேவை டொரன்டோ - மான்ட்ரீல் இடையே 640 கி.மீ. தூரத்துக்கு மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதேபோல அபு தாபி-துபாய் இடையிலும் இந்த சேவை போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிரத்துக்கு முன்பாகவே ஆந்திர மாநில அரசு அமராவதியில் ஹைப்பர் லூப் போக்குவரத்து சேவையை டங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT