Published : 20 Feb 2018 08:53 AM
Last Updated : 20 Feb 2018 08:53 AM

புதிய ஏசி: சாம்சங் அறிமுகம்

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங் புதிய வகை ஏசியை அறிமுகம் செய்துள்ளது. இதை அறிமுகம் செய்த நிறுவனத்தின் நுகர்வோர் மின்னணு சாதனப் பிரிவு துணைத் தலைவர் அலோக் பதாக் கூறியதாவது:

இந்தியாவில் ஏசி பயன்படுத்துபவர்களின் சதவீதம் மிகக் மிகக் குறைவாக, அதாவது 4 சதவீதம் என்கிற அளவில்தான் உள்ளது. புதிய தொழில்நுட்பம், விலை, மற்றும் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப புத்தாக்க முயற்சி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே சந்தையை தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் 2018-ம் ஆண்டில் `வைண்ட்ப்ரீ’ என்கிற புதிய வகையை அறிமுகம் செய்துள்ளோம் என்றார். இதில் ஏசியிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றினை கட்டுப்படுத்த முடியும். இந்த ஏசி மாடல் 4 வகைகளிள் வந்துள்ளது. விலை ரூ . 50,950 லிருந்து தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x