Published : 20 Feb 2018 08:52 AM
Last Updated : 20 Feb 2018 08:52 AM

இவரை தெரியுமா?: சந்த்ருப் மிஸ்ரா

ஆதித்யா பிர்லா குழுமத்தின் மனித வள அதிகாரி மற்றும் கார்பன் பிளாக் தொழிலின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

கார்பன் பிளாக் தொழிலில் உலக அளவில் நான்காவது இடத்தில் இருந்த பிர்லா கார்பனை முதல் இடத்துக்குக் கொண்டு வந்தவர்.

ஒஎன்ஜிசி நிறுவனத்தின் தினசரி அலுவல்கள் இல் லாத இயக்குநராக 2017-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

தேசிய மனிதவள முன்னேற்ற அமைப்பின் தலைவர், அமெரிக்காவின் ஏஈஎஸ்சி அமைப்பின் அறிவுரைக் குழு உறுப்பினர் முதலிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.

சிஇஓ இந்தியா அமைப்பின் `2014ன் சிறந்த உலகத் தலைவர்’, இந்திய மேலாண்மைப் பள்ளி கூட்டமைப்பின் `ரவி ஜெ மத்தாய் தேசிய விருது’ உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் .

ஒடிசாவின் உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டமும், பொது மேலாண்மையில் டாக்டர் பட்டமும் பெற்றவர். பிரிட்டனின் ஆஸ்டன் மேலாண்மை பள்ளியில் தொழில்துறை உறவுகள், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் பணியாளர் மேலாண்மை சார்ந்த உயர்கல்வியும் முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x