Published : 10 Jan 2018 10:11 AM
Last Updated : 10 Jan 2018 10:11 AM

இவரைத் தெரியுமா?- திலீப் அஸ்பே

நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் தற்காலிக சிஇஓ-வாக இருந் தார்.

2013-ம் ஆண்டு முதல் என்பிசிஐ தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்தார். 2010-ம் ஆண்டில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பு வகித்துள்ளார்.

பிரிஸைம் பேமண்ட் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தவர். மும்பை பங்குச் சந்தை, வெஸ்டர்ன் யூனியன் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணி யாற்றியுள்ளார்.

நேஷனல் தானியங்கி பரிவர்த்தனை அமைப்பை உருவாக்கியதில் தலைமைப் பொறுப்பு வகித்தவர்.

ரூபே இண்டர்நேஷனல் கிரெடிட், டெபிட் கார்டு, நேரடி மானிய பரிவர்த்தனை, ஆதார் இணைப்பிலான பணப் பரிவர்த்தனை போன்றவற்றை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

மின்னணு பரிவர்த்தனை துறையில் வல்லுநர். கடந்த 20 ஆண்டுகளாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நிதிச் சேவை மற்றும் பண பரிவர்த்தனை துறை உருவாக்கத்தில் முக்கிய பங் காற்றியுள்ளார்.

மும்பையில் உள்ள பாதர் ஏஞ்செல் பொறியியல் கல்லூரியில் பிஇ பட்டம் பெற்றவர். லண்டனில் உள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் சர்வதேச மேலாண்மையில் உயர்கல்வி முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x