Published : 30 Oct 2017 10:02 AM
Last Updated : 30 Oct 2017 10:02 AM
சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல் படுத்தப்பட்டது. புதிய வரி விகித முறையால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்வதாக அப்போது அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பீட்டை சரிசெய்யும் வகையில் மத்திய அரசு ரூ.8,698 கோடியை ஒதுக்கி இருக்கிறது.
ராஜஸ்தான் மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படவில்லை. அருணாசல பிரதேச மாநில அரசு இழப்பீடு ஏதும் கோரவில்லை. இதேபோல ராஜஸ்தான் மாநில அரசும் இதர காரணங்களுக்காக இழப்பீட்டை கோரவில்லை.
ஜிஎஸ்டி சட்டத்தின் படி மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. சொகுசு கார்கள், காற்றடைக்கப்பட்ட பானங்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு விதிக்கும் அதிகபட்ச வரியின் மேல் செஸ் வசூலிக்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களில் ரூ.15,060 கோடி செஸ் வசூலிக்கப்பட்டிருக்கிறது என பிஹார் துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்தார். இதில் 58 சதவீத தொகை இழப்பீடாக வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT