Published : 22 Aug 2017 10:46 AM
Last Updated : 22 Aug 2017 10:46 AM
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சில குறிப்பிட்ட கடன்களுக்கு பரிசீலனைக் கட்டணங்களை முழுவதுமாக தள்ளுபடி செய்துள்ளது. கார் கடன், தங்க நகை வாங்க கடன் மற்றும் தனி நபர் கடன்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படும். ஏற்கெனவே வீட்டுக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
அக்டோபர் 31 வரை தனி நபர் கடனுக்கான பரிசீலனைக் கட்டணம் 50 சதவீதமாகக் குறைத்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை விரைவான தனிநபர் கடனுக்கான பரிசீலனைக் கட்டணத்தில் 50% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. -பிடிஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT