Published : 10 May 2015 12:09 PM
Last Updated : 10 May 2015 12:09 PM
இரு சக்கர வாகன தயாரிப்பில் மிகவும் பிரபலமாகத் திகழும் ராயல் என்பீல்டு நிறுவனம் 250 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 750 சிசி திறன் கொண்ட சூப்பர் பைக்குகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சித்தார்த்த லால் தெரிவித்தார்.
நிறுவனத்தின் அடிப்படை பலத்தை நன்கு உணர்ந்துள்ளதால் அதன் அடிப்படையில் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய பைக்குகள் ஸ்போர்டி தோற்றம் கொண்டதாக இருக்கும் என்றார். நடப்பாண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ. 500 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் லால் குறிப்பிட்டார். சென்னை மற்றும் இங்கிலாந்தில் உள்ள மேம்பாட்டுப் பிரிவுகளுக்கு இத்தொகை செலவிடப்படும் என்றார்.
தற்போது மாதத்துக்கு 30 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 50 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT