Last Updated : 21 Aug, 2016 01:24 PM

 

Published : 21 Aug 2016 01:24 PM
Last Updated : 21 Aug 2016 01:24 PM

வங்கிகள் இணைப்பின் மூலம் எஸ்பிஐ சொத்து மதிப்பு ரூ. 8 லட்சம் கோடி உயரும்

எஸ்பிஐ வங்கியுடன் ஐந்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைப்பதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8 லட்சம் கோடி உயரும். இது குறித்து நேற்று செய்தி வெளியிட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.எஸ்பிஐ வங்கியுடன் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (எஸ்பிபிஜே) ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (எஸ்பிடி) ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா ( எஸ்பிபி) உள்ளிட்ட 5 வங்கிகள் இணைக்கப்படுகின்றன. மேலும் பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப்படுகிறது.இதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

இந்த இணைப்புக்கு பிறகு இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு எஸ்பிஐ வங்கியின் சொத்து மதிப்பில் நான்கில் ஒரு மடங்கு அளவுக்குத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சர்வதேச அளவில் மிகப்பெரிய 50 வங்கிகளில் ஒன்றாக எஸ்பிஐ இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x