Published : 24 Apr 2015 10:40 AM
Last Updated : 24 Apr 2015 10:40 AM

போர் யானை மீது அமர்ந்து செல்வதைப் போன்று உணர்வேன் - நடிகை கார்த்திகா

டொயோடா பார்சூனர். நான் வாங்கிய முதல் கார். இதில் ஒவ்வொரு முறை அமர்ந்து போகும்போதும் படைகள் சூழ மத்தியில் ஒரு போர் யானை மீது அமர்ந்து போவதைப்போலவே உணர்வேன்.

மும்பை மாதிரியான நெரிசல் மிகுந்த நகரங்களில் போக்குவரத்தை சமாளிப்பதே பெரிய சவால். அதிலும் இவ்வளவு பெரிய கார் செட் ஆகுமா? என்று தோன்றும். பிறந்ததிலிருந்தே அந்த ஊரில் வளர்ந்து வருவதால் பெரிய காரோ, சிறிய காரோ பயணத்தை நிதானமாக எதிர்கொள்ளும் பொறுமை இயல்பாகவே வந்துவிட்டது.

பரபரப்பான நேரத்தில் துளித் துளியாக நகர்ந்து செல்லும் பயணத்திற்கு விசாலமான இதுமாதிரி பெரிய கார்தான் பிரச்சினை இல்லை. எல்லாவற்றிலுமே வெள்ளை நிறம்தான் ஹை கிளாஸ்.

கார் என்றால் மட்டும் மனம் மாறி யோசிக்கத் தோணுமா! என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x