Published : 11 Jun 2014 03:04 AM
Last Updated : 11 Jun 2014 03:04 AM

புதிய நெல் ரகங்கள்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோ-51 என்ற புதிய நெல் ரகத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகம் கோ-51 என்கிறார் திருவாரூர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவரான பேராசிரியர் க.சோழன்.

“105 நாள் வயது கொண்ட குறுகிய நாள் பயிர் கோ-51. மிகவும் சன்ன ரகம். சாயாமல் பயிர் நிலைத்து நிற்கும். பூச்சி தாக்குதலை எதிர்கொள்ளும் தன்மை நிறைந்தது. ஹெக்டேர் ஒன்றுக்கு 6,500 கிலோ மகசூல் தரக் கூடியது” என்கிறார் அவர்.

“மோட்டா ரகத்தைச் சேர்ந்த திருப்பதி சாரம்-5 என்ற நெல் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய கால பயிரான இந்த நெல் ரகமும் நல்ல விளைச்சலைத் தரக் கூடியது” என்று சோழன் கூறுகிறார்.

மேலும் விவரங்களை அறிய அவரை 94438 47067 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x