Published : 05 Nov 2014 12:29 PM
Last Updated : 05 Nov 2014 12:29 PM
வேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயி களுக்குப் பயன்படுகின்றது. வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6% , சாம்பல் சத்து 2.0% உள்ளன.
இதனை நன்செய் நிலங் களுக்கு இடலாம். வேப்பந் தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் குறைந்துவிடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங் களுடன் கலந்து வைத்தால் வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் துளைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
வேப்பங்கொட்டைக் கரைசல்
10 கிலோ வேப்பங் கொட்டையை நன்கு தூளாக்கி அதை 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவி னிகள், தத்துப்பூச்சிகள், புகை யான், இலைச்சுருட்டுப்புழு, ஆணைக் கொம்பன், கதிர்நா வாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பயிர் களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளைக் கட்டுப்படுத்த வேப்பெண் ணெய்க் கரைசல் பயன்படும்.
வேப்பம் புண்ணாக்கு
வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச் சத்து 1.1%, சாம்பல் சத்து 1.5%உள்ளன. இதை நேரடியாக பயிருக்கு இடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT