Published : 07 Sep 2016 10:59 AM
Last Updated : 07 Sep 2016 10:59 AM

எக்விடாஸ் சிறிய வங்கி தொடக்கம்

சென்னையைத் தலைமையிட மாகக் கொண்ட எக்விடாஸ் சிறிய வங்கி தனது சேவையை தொடங்கியுள்ளது. சென்னையில் முதலில் 3 கிளைகளுடன் செயல்பாடுகளைத் தொடங்கும் எக்விடாஸ் நடப்பு நிதியாண்டின் இறுதியில் நாட்டின் 11 மாநிலங்களில் 412 கிளைகளைத் திறக்க திட்டமிட் டுள்ளது. இதில் 50% கிளைகள் தென் மாநிலங்களில் தொடங்கப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

செப்டம்பர் 5-ம் தேதி செயல் பாடுகளை தொடங்கிய இந்த வங்கியின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலை மைச் செயல் அதிகாரியுமான பி.என்.வாசுதேவன் பேசியதாவது;

சாதாரணமாக வங்கிச் செயல் பாடாக இருந்தாலும், அதில் புதுமை யான ஒரு அலையை உருவாக்க வேண்டும், வாடிக்கையாளர் களுக்கு வங்கி செயல்பாடுகளில் மகிழ்ச்சிகரமான உணர்வைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்க ளது குறிக்கோளாக இருந்தது. பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவையை அளிக்க திட்ட மிட்டுள்ளோம். இதற்காக எங்களது கிளை பிரதிநிதிகள் வாடிக்கை யாளர்களின் வீடுகளுக்கே சென்று சேவை அளிப்பார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x