Published : 28 Jul 2016 10:46 AM
Last Updated : 28 Jul 2016 10:46 AM
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ரீடெய்ல் விற்பனையகங்களைத் திறக்க தயாராக இருக்கிறோம் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். இந்தியா வில் ஆப்பிள் நிறுவன பொருட்க ளின் சந்தை வளர்ச்சி அடைந்து வருவதால் விரைவில் இந்தி யாவில் விற்பனையகங்களைத் திறக்க இருக்கிறோம் என்றும் டிம் குக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: கடந்த மூன்று காலாண்டுகளாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் 51 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக உள்ளது. எங்க ளது தயாரிப்புகளும் அதிக விற் பனையை கண்டு வருகின்றன. மிகப் பெரிய ஆற்றல் வளம் உள்ள நாடாக இந்தியா திகழ்ந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்தியாவில் ரீடெய்ல் கடைகளை திறப்பது குறித்து ஆராயந்து வருகிறோம். இவ்வாறு டிம் குக் தெரிவித்துள்ளார்.
ஐபோன் விற்பனை சரிந்துள் ளதால் ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு வருமா னம் 27 சதவீதம் குறைந்து 780 கோடி டாலராக குறைந்துள்ளது. இந்த காலாண்டில் 4.04 கோடி ஐபோன்கள் மட்டுமே விற்பனை யாகியுள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4.75 ஐபோன் கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் ஸ்மார்ட்போன் சந்தையில் அமெரிக்காவை இந்தியா முந்திச் செல்லும் என்று மார்கன் ஸ்டான்லி ஆய்வில் தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-15 நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருவாயில் இந்தியாவின் பங்க ளிப்பு 1 சதவீதம் மட்டுமே. ஆனால் இந்த வருடம் விற்பனை அதிக ரித்து வருகிறது. எதிர்காலத்தில் ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை யாக வளர்ச்சியடையும் என்ற நீண்ட கால நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ரீடெய்ல் கடைகளை திறக்க இருக்கிற து. கடந்த மே மாதம் டிம் குக் இந்தியாவிற்கு வந்திருந்த போது, இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு இருப்போம் என்று தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT