Published : 17 Oct 2014 11:43 AM
Last Updated : 17 Oct 2014 11:43 AM
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 31-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
அனைத்து இந்திய வணிகர் சங்கப் பேரவை தேசியத் தலைவர் விக்கிரம ராஜா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக வணிகர்களின் பிரச்சினைகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது.
உணவு, தர நிர்ணய பாது காப்பு சட்டத்தில் உள்ள விதிமுறை கள் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்திய பிறகுதான், அதை அமல்படுத்து வோம் என்ற வாக்குறுதியை மத்திய அரசு மீறியுள்ளது. அதே போன்று, சில்லறை வர்த்தகத்தில் கால் பதித்து வரும் ஆன்லைன் வர்த்தகத் துக்கு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT